Wednesday, April 7, 2010

சிரிக்கவும், சிந்திக்கவும்

தண்டனைக்குப் பிறகு சிரிப்பா?

ஒரு அரசர் திடீர் , தீடிர் என்று சில அறிவிப்புகளை அவ்வபோது கொடுத்து மக்களை அதிர்ச்சி அடைய வைப்பார். அதுபோல ஒருமுறை இதுவரை சுவைக்காத பழத்தை கொண்டு வந்து தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும், ஏற்கனவே சாப்பிட்ட பழத்தை கொண்டு வந்தால் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார் அரசர். அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் பரிசு பெறவேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொருவரும் விதவிதமான பழங்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் பப்பாளி பழத்தை கொண்டு வந்தார். அதை கண்ட மன்னர் கோபத்துடன் பப்பாளி தான் ஏற்கனவே சாபிட்ட பழம் என்பதால், கொண்டு வந்தவருக்கு தண்டனை தருவதற்காக அவருடைய வாயில் பப்பாளி பழத்தை வைத்து அழுத்த சொன்னார். ரத்தம் பீறிட்டு கொண்டு வந்தது. தண்டனையையும் பொருட்படுத்தாமல் அந்த மனிதர் சிரித்தார். மன்னருக்கோ கோபம் இன்னும் அதிகமாகியது. தண்டனை கொடுத்ததற்கு ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். மன்னர் எனக்கு பின்னால் ஒருவர் கையில் பலாபழத்தை வைத்துகொண்டு நிற்கிறார். அதுவும் நீங்கள் ஏற்கனவே சாபிட்ட பழம் என்பதை நினைத்துக் கொண்டேன் ! என்றார் சிரித்துகொண்டே.

நன்றி சகோதரி சோனா

********

1 comment:

  1. hey ida enga irundu edutha erkanavea nan padichutean any how nalla irukudu papaya
    -சுஜி

    ReplyDelete